விஷம் குடித்து லாரி டிரைவர் தற்கொலை


விஷம் குடித்து லாரி டிரைவர் தற்கொலை
x
தினத்தந்தி 25 Jun 2023 10:52 PM IST (Updated: 26 Jun 2023 1:15 PM IST)
t-max-icont-min-icon

ஆற்காட்டில் விஷம் குடித்து லாரி டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்

ராணிப்பேட்டை

ஆற்காடு

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ராமன் தெருவை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 45), லாரி டிரைவர். இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் வேலைக்குச் செல்லாமல் சிகிச்சையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் கடந்த 22-ந் தேதி இரவு விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

ஆபத்தான நிலையிலிருந்த அவரை குடும்பத்தினர் மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை வேல்முருகன் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story