லாரி டிரைவர் மர்மச் சாவு


லாரி டிரைவர் மர்மச் சாவு
x

காவேரிப்பாக்கத்தில் லாரி டிரைவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

ராணிப்பேட்டை

காவேரிப்பாக்கம் தர்மலிங்க முதலி தெருவில் வசித்து வந்தவர் ரவிசங்கர் (வயது 51). லாரி டிரைவர். நேற்று காலை இவருடைய வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அங்கிருந்தவர்கள் வீட்டின் கதவை திறந்து பார்த்தபோது ரவிசங்கர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த கிராம நிர்வாக அலுவலர் நவீன் சம்பவம் குறித்து காவேரிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

1 More update

Next Story