செம்மண் கடத்திய லாரி பறிமுதல்


செம்மண் கடத்திய லாரி பறிமுதல்
x
தினத்தந்தி 29 July 2023 12:15 AM IST (Updated: 29 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மணல்மேட்டில் செம்மண் கடத்திய லாரி பறிமுதல்

மயிலாடுதுறை

மணல்மேடு:

மணல்மேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் மற்றும் போலீசார் மணல்மேட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக செம்மண் ஏற்றி சென்ற ஒரு லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் உரிய அனுமதி இன்றி 6 யூனிட் செம்மண் ஏற்றி சென்றது தெரியவந்தது. இதுதொடர்பாக லாரி டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். அதில் அவர் கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா ஒத்தவீடு கிராமத்தை சேர்ந்த பழனியப்பன் மகன் சுரேஷ் (வயது 33) என்பதும், அவர் உரிய அனுமதியின்றி செம்மண் கடத்தி சென்றதும் தெரியவந்தது. உடனே போலீசார் செம்மண்ணுடன் லாரியை பறிமுதல் செய்து மணல்மேடு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேசை கைது செய்தனர். மேலும் செம்மண் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது, யாருக்கு கொண்டு செல்லப்படுகிறது என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story