3 டன் ரேஷன் அரிசியுடன் லாரி பறிமுதல்

களம்பூா் அருகே 3 டன் ரேஷன் அரிசியுடன் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் களம்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சத்யா, ஜெய்சங்கர், தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் வடமாதிமங்கலம் கூட்ரோடு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக சென்ற லாரியை நிறுத்தி ேசாதனை செய்தனர். அதில், 3 டன் ரேஷன் அரிசி கடத்தி செல்வது தெரியவந்தது. இதனையடுத்து லாரியை ஓட்டி வந்த கலசபாக்கம் தாலுகா தேவனாம்பட்டு கிராமத்தை சேர்ந்த டிரைவர் பாபு (வயது 35) மற்றும் ரேஷன் அரிசியுடன் லாரியை பறிமுதல் செய்து, மாவட்ட உணவு பாதுகாப்பு போலீசாரிடம் களம்பூர் போலீசார் ஒப்படைத்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





