லாரி திருடியவர் கைது


லாரி திருடியவர் கைது
x

கங்கைகொண்டான் அருகே லாரி திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

கங்கைகொண்டான் அருகே உள்ள துறையூரை சேர்ந்தவர் அலெக்சாண்டர் (வயது 32). இவர் சொந்தமாக லாரி வைத்து தொழில் செய்து வருகிறார். கடந்த 19-ந் தேதி அலெக்சாண்டர் அவருடைய வீட்டிற்கு அருகே லாரியை நிறுத்திவிட்டு சென்று விட்டார். நேற்று காலையில் வந்து பார்த்த போது லாரியை காணவில்லை.

இதுகுறித்து அலெக்சாண்டர் கங்கைகொண்டான் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சுதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், லாரியை திருடி சென்றது மேலஇலந்தகுளம், பத்திரகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தவமணி (29) என்பது தெரியவந்தது. உடனே போலீசார் தவமணியை நேற்று கைது செய்து அவரிடமிருந்து லாரியை பறிமுதல் செய்தனர்.


Related Tags :
Next Story