ஆன்லைன் லாட்டரி விற்றவர் கைது

ஆன்லைன் லாட்டரி விற்றவர் கைது செய்யப்பட்டாா்.
திண்டிவனம்,
திண்டிவனம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராசன் தலைமையிலான போலீசார் திண்டிவனம் கல்லூரி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனா். அதில், அவர் அதே பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் செந்தில்குமார் (வயது 27) என்பதும், அரசால் தடைசெய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரிகளை செல்போன் மூலம் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து, 3 செல்போன்கள், ஒரு ஸ்கூட்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





