பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்


பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்
x

வேலகவுண்டம்பட்டி போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.

நாமக்கல்

பரமத்திவேலூர்

நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள கூத்தம்பூண்டி, அண்ணா நகரை சேர்ந்தவர் நடேசன். இவரது மகன் பூபதி (வயது 23). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு ஊராட்சி மன்றத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள செட்டியாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் சிம்மாசினி (21). இவர் கோட்டப்பள்ளியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களது காதல் பெற்றோர்களுக்கு தெரிய வந்ததால் இருவரையும் அவர்களது பெற்றோர்கள் கண்டித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி சேலம் அருகே உள்ள முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் பெற்றோர்களுக்கு பயந்து நேற்று வேலகவுண்டம்பட்டி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். அதனையடுத்து போலீசார் இருதரப்பு பெற்றோர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சிம்மாசினி, பூபதியுடன் செல்வதாக கூறியதை அடுத்து வேலகவுண்டம்பட்டி போலீசார் சிம்மாசினியை அவரது கணவர் பூபதியுடன் அனுப்பி வைத்தனர்.


Next Story