திட்டக்குடி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடி...!


திட்டக்குடி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடி...!
x

திட்டக்குடி போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்து உள்ளனர்.

கடலூர்


கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்த தி.இளமங்கலம் பகுதியை சேர்ந்த மணிவேல் மகன் அன்புராஜ்(வயது 28). இவர் அதே பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகள் நித்யா(24) என்பவரும் கடந்த 4 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று மாலை வேப்பூர் அருகே உள்ள ஆவட்டி பெரியநாயகி அம்மன் கோவிலில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். வீட்டுக்கு சென்றால் பிரச்சனை ஏற்படும் என பயந்து மணமக்கள் இருவரும் கழுத்தில் மாலையுடன் திட்டக்குடி போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

பின்னர் திட்டக்குடி போலீசார் இருவீட்டாரையும் அழைத்துப்பேசி சமாதானம் செய்து வைத்தனர்.


Next Story