காதல் திருமணம் செய்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

உவரி அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் காதல் திருமணம் செய்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருநெல்வேலி
திசையன்விளை
நெல்லை மாவட்டம் உவரி அருகே உள்ள கோடாவிளை வடக்கு தெருவை சேர்ந்தவர் ரூபன் (வயது 35). இவரது மனைவி இளவரசி. இவர்கள் காதல் திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
ரூபனுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் சம்பவத்தன்று ரூபன் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் வரக்தி அடைந்த ரூபன் வீட்டு மாடியில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து அவரது மனைவி உவரி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பிரேமா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story






