காதல் திருமணம் செய்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


காதல் திருமணம் செய்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x

காதல் திருமணம் செய்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை, ஏப்.17-

புதுக்கோட்டை காந்தி நகரை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் (வயது 27). இவர் புதுக்கோட்டையில் ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார். இவர் சுபாஷினி (24) என்ற இளம்பெண்ணை காதலித்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துக்கொண்டார். இந்த நிலையில் போதுமான வருமானம் இல்லாத நிலையில் சம்பவத்தன்று பாலசுப்ரமணியன் தூக்கில் தொங்கினார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன் இல்லாமல் இறந்தார். இதுகுறித்து கணேஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலசுப்ரமணியன் தற்கொலை செய்ததற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.


Next Story