லோயர்கேம்ப் நிலையத்தில் மின் உற்பத்தி குறைவு


லோயர்கேம்ப் நிலையத்தில் மின் உற்பத்தி குறைவு
x
தினத்தந்தி 26 Feb 2023 6:45 PM GMT (Updated: 26 Feb 2023 6:45 PM GMT)

கூடலூர் அருகே லோயர்கேம்ப் நிலையத்தில் மின்உற்பத்தி குறைந்தது.

தேனி

கூடலூர் அருகே ேலாயர்கேம்பில் நீர்மின் உற்பத்தி நிலையம் உள்ளது. முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் இங்கு மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்காக 4 ஜெனரேட்டர்கள் உள்ளன. ஒரு ஜெனரேட்டரில் வினாடிக்கு 450 கன அடி வீதம் 42 மெகாவாட் மின் உற்பத்தியாகும். அதன்படி 4 ஜெனரேட்டரில் 128 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய முடியும். கடந்த 20-ந்தேதி வரை 3 ஜெனரேட்டரிகளில் மின் உற்பத்தி நடந்தது. இந்நிலையில் கடந்த 21-ந்தேதி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு வினாடிக்கு 700 கன அடியாக குறைக்கப்பட்டது. இதனால் 3 ஜெனரேட்டர்கள் மூலம் வினாடிக்கு 68 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு இல்லாததால் நீர்வரத்து முற்றிலும் நின்றுவிட்டது. இதன் காரணமாக முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு திறந்துவிடப்படும் தண்ணீர் வினாடிக்கு 511 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நேற்று காலை முதல் லோயர்கேம்ப் மின்உற்பத்தி நிலையத்தில், 2 ஜெனரேட்டரில் மட்டும் தலா 23 மெகாவாட் வீதம் மொத்தம் 46 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.


Next Story