பாதயாத்திரை பக்தர்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கர்


பாதயாத்திரை பக்தர்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கர்
x
தினத்தந்தி 1 Feb 2023 6:45 PM GMT (Updated: 1 Feb 2023 6:46 PM GMT)

பாவூர்சத்திரத்தில் பாதயாத்திரை பக்தர்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கர் வழங்கப்பட்டது.

தென்காசி

பாவூர்சத்திரம்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வருகிற 5-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தைப்பூச திருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி பாவூர்சத்திரம் சுற்று வட்டார பகுதிகளான கல்லூரணி, மடத்தூர், திப்பணம்பட்டி, சடையப்பபுரம், கீழப்பாவூர், கொண்டலூர், சிவகாமிபுரம். ஆவுடையானூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் பாதயாத்திரை மேற்கொண்டனர்.

அவர்களுக்கு பாவூர்சத்திரத்தில் வணிகர் சங்கம் சார்பில் ஒளிரும் ஸ்டிக்கர், பிஸ்கட், குடிநீர் பாட்டில் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பாவூர்சத்திரம் இன்ஸ்பெக்டர் சுதந்திராதேவி பங்கேற்று, பக்தர்கள் அனைவரும், சாலையின் வலது புறம், கூட்டமாக செல்லாமல், வரிசையாக செல்லுமாறு அறிவுரை வழங்கினார்.

நிகழ்ச்சியில் நெல்லை தட்சணமாற நாடார் சங்க தலைவர் ஆர்.கே.காளிதாசன், பாவூர்சத்திரம் வணிகர்கள் சங்க தலைவர் பாலசுப்பிரமணியன், செயலாளர் விஜய்சிங் ராஜ், பொருளாளர் ஆரோக்யராஜ் மற்றும் காமராஜர் தினசரி சங்க செயலாளர் நாராயண சிங்கம், மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story