சந்திர கிரகணம்: திருப்பரங்குன்றம் கோவிலில் நாளை இரவு 7 மணிக்கு நடை அடைப்பு

சந்திர கிரகணத்தையொட்டி திருப்பரங்குன்றம் கோவிலில் நாளை இரவு 7 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் முருகன் கோவில் துணை கமிஷனர் சுரேஷ் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நாளை (சனிக்கிழமை) இரவு 1.05 மணி முதல் இரவு 2.23 வரை முழு சந்திர கிரகணம் ஏற்படுகிறது ஆகவே நாளை இரவு 7 மணி முதல் நடைசாத்தப்படுகிறது. மறுநாள் 29-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வழக்கம் போல காலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





