மாதவரம் ரவுண்டானா அருகே மின் கம்பியில் கன்டெய்னர் உரசியதில் மின்சாரம் தாக்கி டிரைவர் பலி


மாதவரம் ரவுண்டானா அருகே மின் கம்பியில் கன்டெய்னர் உரசியதில் மின்சாரம் தாக்கி டிரைவர் பலி
x

மாதவரம் ரவுண்டானா அருகே மின் கம்பியில் கன்டெய்னர் உரசியதில் மின்சாரம் தாக்கி டிரைவர் பரிதாபமாக இறந்தார்.

சென்னை

சென்னை துறைமுகத்தில் இருந்து மாதவரம் ரவுண்டானா அருகே உள்ள தனியார் குடோனுக்கு சரக்கு ஏற்றிக்கொண்டு நேற்று அதிகாலை 2 மணியளவில் கன்டெய்னர் லாரி வந்தது. லாரியை விருது நகர் மாவட்டம் சாத்தூர் அடுத்த மெத்தமலை தெற்கு தெருவைச் சேர்ந்த காளிராஜ் (வயது 32) என்பவர் ஓட்டி வந்தார்.

குடோன் வாசல் அருகே லாரியை திருப்பியபோது, மேலே சென்று கொண்டிருந்த உயர்மின் அழுத்த கம்பியில் கன்டெய்னர் பெட்டி உரசியது.

இதில் கன்டெய்னர் லாரியில் மின்சாரம் பாய்ந்து, இருக்கையில் அமர்ந்தபடியே டிரைவர் காளிராஜ் பரிதாபமாக இறந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடோனில் இருந்த ஊழியர்கள் மின்வாரியத்துக்கும், மாதவரம் போலீசுக்கும் தகவல் கொடுத்தனர்.

மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக அந்த பகுதிக்கு செல்லும் மின்சாரத்தை துண்டித்தனர். இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, இறந்து கிடந்த காளிராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story