அமைச்சர் பொன்முடி மீது சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கு


அமைச்சர் பொன்முடி மீது சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கு
x
தினத்தந்தி 10 Aug 2023 3:18 AM GMT (Updated: 10 Aug 2023 4:57 AM GMT)

அமைச்சர் பொன்முடியை விடுவித்த வேலூர் நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரிக்கிறது.

சென்னை,

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி விடுவிக்கப்பட்டது குறித்து சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரிக்கிறது. அமைச்சர் பொன்முடியை விடுவித்த வேலூர் நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரிக்கிறது.

எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்து வருகிறார். நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ள நிலையில், இன்று விசாரணை நடைபெறுகிறது.

இந்த வழக்கு இன்று மாலை விசாரணைக்கு வருகிறது. வழக்கு விசாரணைக்கு வந்த பிறகே முழு விபரங்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story