மதுரை: கள்ளழகர் கோவில் வளாகத்தில் உள்ள அறையில் திடீர் தீ விபத்து


மதுரை: கள்ளழகர் கோவில் வளாகத்தில் உள்ள அறையில் திடீர் தீ விபத்து
x

மதுரை கள்ளழகர் கோவில் வளாகத்தில் உள்ள அறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மதுரை,

மதுரை மேலூர் அருகே கள்ளழகர் கோவில் வளாகத்தில் உள்ள அறையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

பழைய புகைப்படங்கள் மற்றும் இதர பொருட்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பக்தர்கள் அனைவரும் துரிதமாக கோயிலை விட்டு வெளியேற்றப்பட்டதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.

தற்போது தீயிணை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story