அல்லியாளமங்கலம் மகா காளியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்


அல்லியாளமங்கலம் மகா காளியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்
x

சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியம் அல்லியாளமங்கலம் கிராமத்தில் உள்ள மகா காளியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.

திருவண்ணாமலை

சேத்துப்பட்டு

சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியம் அல்லியாளமங்கலம் கிராமத்தில் உள்ள மகா காளியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.

இதனையொட்டி கோவில் முன்பு பெரிய பந்தல் அமைத்து அதில் பல்வேறு நதிகளில் இருந்த கொண்டுவரப்பட்ட தீர்த்தங்கள் 108 கலசங்களில் நிரப்பப்பட்டு நவ மூலிகையை கொண்டு சிவாச்சாரியார்கள் யாகம் நடத்தினர்.

கணபதி பூஜை, லட்சுமி பூஜை, கோ பூஜை, நவகிரக பூஜை, தம்பதிகள் பூஜைகள் நடந்தன. பூஜைகள் நிறைவு பெற்றதும் கலசங்கள் ராஜகோபுரக்கு எடுத்துச்செல்லப்பட்டு அதில் புனிதநீரை ஊற்றி கும்பாபிேஷகம் செய்து சிவாச்சாரியார்கள் கற்பூர ஆரத்தி காட்டினர். கும்பாபிஷேக விழாவில் அல்லியாளமங்கலம், செமியமங்கலம், பெரணம்பாக்கம், ராந்தம், மட்டப்பிறையூர், மண்ட கொளத்தூர், முடையூர், தேவிகாபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. மூலவர் சன்னதியில் உள்ள மகா காளி அம்மனுக்கு அபிஷேகம் அலங்காரம் செய்து கற்பூர ஆராதனை செய்யப்பட்டது. இதனையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு மகாகாளி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதிஉலா நடந்தது. அதன்பின் நாடகம் நடைபெற்றது. ஏற்பாடுகளை அல்லியாளமங்கலம் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். கும்பாபிஷேகத்தை தொடர்ந்து 48 நாள் மண்டல பூஜை தொடங்கியது.


Next Story