குற்றாலத்தில் ஆண் பிணம்


குற்றாலத்தில் ஆண் பிணம்
x
தினத்தந்தி 9 July 2023 6:45 PM GMT (Updated: 10 July 2023 11:56 AM GMT)

குற்றாலத்தில் ஆண் பிணம் கிடந்தது.

தென்காசி

குற்றாலத்தில் குற்றாலநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான தேர் நிறுத்தும் பகுதி அருகில் அழுகிய நிலையில் 45 வயது முதல் 50 வரை மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்தது. தகவல் கிடைத்ததும் குற்றாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி அங்கு சென்று பார்வையிட்டார். அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இறந்து போனவர் வாடாமல்லி நிறத்தில் கரை உடைய வெள்ளை வேட்டியும், கருப்பு நிறத்தில் கோடு போட்ட முழுக்கை சட்டையும் அணிந்துள்ளார். அவர் இறந்து சுமார் 4 நாட்கள் இருக்கலாம் என கருதப்படுகிறது.

இதுகுறித்து குற்றாலம் கிராம நிர்வாக அதிகாரி முகமது அப்துல் அலி குற்றாலம் போலீசில் புகார் செய்தார். இறந்தவரின் உடல் பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story