வாய்க்காலில் ஆண் பிணம்

கம்பத்தில், ஊமை வாய்க்காலில் ஆண் பிணம் கிடந்தது.
கம்பம் ஊமை வாய்க்காலில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று மிதந்தது. இதை அந்த வழியாக வேலைக்கு சென்ற தொழிலாளர்கள் பார்த்தனர். பின்னர் அவர்கள் கம்பம் தெற்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் அரைகால் டவுசர் மற்றும் கழுத்தில் ருத்ராட்சை அணிந்திருந்தார். ஆனால் அவர் யார்?. எந்த ஊரை சேர்ந்தவர்?, எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





