பட்டா பெற்றுக்கொடுப்பதாக கூறி ரூ.14 லட்சம் மோசடி புகார்


பட்டா பெற்றுக்கொடுப்பதாக கூறி ரூ.14 லட்சம் மோசடி புகார்
x

பட்டா பெற்றுக்கொடுப்பதாக கூறி ரூ.14 லட்சம் மோசடி புகார்

திருப்பூர்

திருப்பூர்,

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அனைத்து மாற்றுத்திறனாளிகள் நல சங்கத்தின் தலைவர் பழனிசாமி தலைமையில் ஆதிதிராவிட மக்கள் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் பழனிசாமி கூறியிருப்பதாவது:-

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய, மாநில அரசின் சலுகைகளை பெற்றுத்தருவது, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரசு மூலம் இலவச பட்டா பெற்றுக்கொடுத்துள்ளேன். இந்தநிலையில் கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் சங்கர் என்பவரின் பழக்கம் கிடைத்தது. பின்னர் அவர் என்னிடம் வந்து, பல்லடம் எம்.எல்.ஏ.வுக்கு உதவியாளர் என்றும், பட்டா பெற்றுக்கொடுப்பதாகவும், அதற்கு பணம் பெற்றுக்கொடுத்தால் உடனடியாக கிடைக்க ஏற்பாடு செய்வதாக கூறினார். இதை என்னிடம் வருபவர்களிடம் கூறினேன். அவர்களும் பணம் கொடுத்தார்கள். இவ்வாறு 150 விண்ணப்பங்களுக்கு பட்டா பெற ரூ.14 லட்சத்தை சங்கரிடம் கொடுத்தேன். அதன்பிறகு அவர் போனை எடுக்கவில்லை. பின்னர் தொடர்பு கொண்டு கேட்டபோது, அதிகாரிகளுக்கு பணம் கொடுத்துவிட்டேன். எனக்கு இனி பணம் கொடுத்தால் தான் பட்டா பெற்றுக்கொடுப்பதாக கூறினார். திருப்பூர் தாசில்தாரை சந்தித்து விவரம் கேட்டபோதே, சங்கர் எங்களை ஏமாற்றியது தெரியவந்தது. எனவே எங்கள் பணத்தை மீட்டுக்கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


1 More update

Next Story