லாட்டரி சீட்டு விற்றவர் கைது


லாட்டரி சீட்டு விற்றவர் கைது
x
தினத்தந்தி 25 Feb 2023 7:15 PM GMT (Updated: 25 Feb 2023 7:15 PM GMT)

லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார்.

மயிலாடுதுறை

லாட்டரி சீட்டு விற்றவர் கைதுமயிலாடுதுறை ரெயிலடி எரகலித்தெருவில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாதேவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு ஒரு வீட்டின் முன்பு லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட மயிலாடுதுறை ரெயிலடி எரகலித்தெருவை சேர்ந்த ராஜா மகன் அருள் பிரதீப் (வயது 35) என்பவரை பிடித்து சோதனையிட்டனர். அப்போது அவரிடமிருந்த கேரள மாநில ஆன்லைன் லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அருள்பிரதீப்பை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story