பெண்ணை தாக்கியவர் கைது


பெண்ணை தாக்கியவர் கைது
x

பெண்ணை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

தஞ்சாவூர்

திருவையாறு அருகே உள்ள கீழத்திருப்பூந்துருத்தி மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்த கேசவன் மகன் பிரதாப் (வயது25). இவர் அந்த பகுதியில் உள்ள வாழைத்தோப்பில் பூ நார் உரிக்கும் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் 46 வயதான பெண் ஒருவரின் வீட்டின் கதவை தட்டி உள்ளார். தொடர்ந்து அவருடைய சேலையை பிடித்து கீழே தள்ளி காலால் மிதித்து தாக்கி உள்ளார். இதுகுறித்து நடுக்காவேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரதாப்பை கைது செய்தனர்.

1 More update

Next Story