அரசு பஸ் டிரைவரை தாக்கியவர் கைது


அரசு பஸ் டிரைவரை தாக்கியவர் கைது
x

நெல்லையில் அரசு பஸ் டிரைவரை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

நெல்லை மேலப்பாளையம் வசந்தாபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஜோதி (வயது 46). அரசு பஸ் டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். மேலப்பாளையம் பகுதியில் சென்றபோது அங்கு குமரேசன் (19) என்ற வாலிபர் வந்தார். அவர் ஜோதியை அவதூறாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குமரேசனை கைது செய்தனர்.


Next Story