லாரி டிரைவரிடம் செல்போன், பணம் பறித்தவர் கைது


லாரி டிரைவரிடம் செல்போன், பணம் பறித்தவர் கைது
x
நாமக்கல்

மோகனூர் அருகே உள்ள மணப்பள்ளி கணபதிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது40). லாரி டிரைவர். இவர் கடந்த 24-ந் தேதி மாலை நாமக்கல் பஸ்நிலையத்தில் ஈரோடு பஸ்கள் நிற்கும் இடத்தில் பஸ்சிற்காக காத்திருந்தார்.

அப்போது அங்கு வந்த 3 பேர் அவரிடம் இருந்து ரூ.3,500 மற்றும் செல்போனை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இது குறித்து பாலசுப்பிரமணியன் நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மேட்டுத்தெருவை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (38) என்பவர் உள்ளிட்ட 3 பேர், பாலசுப்பிரமணியனிடம் செல்போன் மற்றும் பணத்தை பறித்து சென்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஹரிகிருஷ்ணனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story