நெகமம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தவர் சாவு

நெகமம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தவர் சாவு
கோயம்புத்தூர்
நெகமம்
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ஷோனோமோட்டோ (வயது 23). இவர் நெகமம் அருகே கள்ளிப்பட்டியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 15-ந்தேதி மோட்டார் சைக்கிளில் நெகமம் சென்று விட்டு வந்துள்ளார். அப்போது நெகமம் -பொள்ளாச்சி ரோட்டில் கருமாபுரம் பஸ் நிலையம் அருகே வந்து கொண்டு இருந்த போது நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
இதில் ஷோனாமோட்டோ படுகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்தவர் பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story






