மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தவர் சாவு


மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தவர் சாவு
x

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தவர் பரிதாபமாக இறந்தார்.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே உள்ள கடகால் கிராமத்தை சேர்ந்தவர்கள் விஜயகுமார் (வயது 31), பச்சமுத்து (32). இவர்கள் 2 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் சு.பில்ராம்பட்டு காளியம்மன் கோவில் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளுடன் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் மேல்சிகிச்சைக்காக விஜயகுமார் சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் அரகண்டநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.


Related Tags :
Next Story