மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தவர் சாவு


மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தவர் சாவு
x
தினத்தந்தி 8 Feb 2023 6:49 PM GMT (Updated: 9 Feb 2023 5:53 AM GMT)

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தவர் இறந்தார்.

புதுக்கோட்டை

செம்பட்டிவிடுதி அருகே மணவிடுதியை சேர்ந்தவர் புஷ்பராஜ் (வயது 42). இவர் கட்ராம்பட்டி அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்து எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் படுகாயடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த செம்பட்டிவிடுதி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து புஷ்பராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், செம்பட்டிவிடுதி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Related Tags :
Next Story