ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்தவர் சாவு

ஆரணி அருகே ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்தவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த குண்ணத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 55). இவர், சேவூர் அருகே ஸ்கூட்டரில் செல்லும் போது திடீரென தவறி கீழே விழுந்தார்.
இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், உதயகுமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் ஆரணி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





