வாலிபருக்கு கத்திக்குத்து; தொழிலாளி கைது


வாலிபருக்கு கத்திக்குத்து; தொழிலாளி கைது
x

வாலிபருக்கு கத்திக்குத்து விழுந்தது.

தஞ்சாவூர்

தஞ்சை அருகே உள்ள வெண்டையம்பட்டியை சேர்ந்தவர் இளையராஜா (வயது34). விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி ராஜா (26). இளையராஜா மற்றும் ராஜா ஆகியோருக்கு இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று புதுக்குடியில் நடைபெற்ற திருமணத்திற்கு இளையராஜா, ராஜா ஆகிய இருவரும் வந்துள்ளனர். அப்போது திருமண மண்டபத்தின் அருகே இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ராஜா, இளையராஜாவை கீழே தள்ளி விட்டு கத்தியால் குத்தி உள்ளார். இதில் காயம் அடைந்த இளையராஜாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் செங்கிப்பட்டி போலீசார் ராஜா மீது வழக்குப்பதிவு செய்து அவரை நேற்று மாலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story