காரில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

நெல்லை அருகே காரில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா, சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் போலீசார் நேற்று பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். நெல்லை பகுதியில் காரில் 700 கிலோ ரேஷன் அரிசி கடத்தியதாக மானூர் அருகே உள்ள கானார்பட்டியை சேர்ந்த மைக்கேல் (வயது 23) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். மேலும் அரிசியுடன் காரும் பறிமுதல் செய்யப்பட்டது. திருப்பணிகரிசல்குளம் காமராஜ்நகரை சேர்ந்த மாரியப்பனை தேடி வருகிறார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





