காரில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

தென்காசி அருகே காரில் ரேஷன் அரிசி கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயகுமார் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தென்காசி அருகே உள்ள பாட்டகுறிச்சியில் காரில் வந்த நபரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர் அதில் 750 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து காரில் வந்த தட்டாங்குளத்தை சேர்ந்த அருண்பாண்டி (வயது 29) என்பவரை கைது செய்து, அரிசியுடன் காரையும் பறிமுதல் செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





