காரில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது


காரில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
x
தினத்தந்தி 11 Jun 2023 6:45 PM GMT (Updated: 11 Jun 2023 6:46 PM GMT)

தென்காசி அருகே காரில் ரேஷன் அரிசி கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி

தென்காசி உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயகுமார் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தென்காசி அருகே உள்ள பாட்டகுறிச்சியில் காரில் வந்த நபரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர் அதில் 750 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து காரில் வந்த தட்டாங்குளத்தை சேர்ந்த அருண்பாண்டி (வயது 29) என்பவரை கைது செய்து, அரிசியுடன் காரையும் பறிமுதல் செய்தனர்.


Next Story