டிராக்டரில் மண் கடத்தியவர் கைது


டிராக்டரில் மண் கடத்தியவர் கைது
x

டிராக்டரில் மண் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

தென்காசி

சிவகிரி:

சிவகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நவமணி தலைமையில் போலீசார் சுற்று வட்டார பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சிவகிரி சின்ன ஆவுடைப்பேரி கண்மாயில் இருந்து மண் அள்ளி கடத்தி வந்த டிராக்டரை வழிமறித்து டிரைவரிடம் விசாரித்தனர்.

விசாரணையில், அவர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பி.எஸ்.கே. மாலையாபுரம் பகுதியைச் சேர்ந்த நாதன் மகன் முத்து கணேசன் சூர்யா (வயது 25) என்பதும், போலியாக அனுமதிச்சீட்டு தயாரித்து முறைகேடாக கண்மாயில் இருந்து மண் அள்ளி கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து முத்து கணேசன் சூர்யாவை கைது செய்து, டிராக்டரை பறிமுதல் செய்தனர்.

1 More update

Next Story