மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி


மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி
x

திருப்புகலூர் ஊராட்சியில் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

நாகப்பட்டினம்

திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் ஊராட்சி சார்பில் மஞ்சள் பை விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். ஒன்றிய பொறியாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்து, பொதுமக்களுக்கு மஞ்சள் பை வழங்கி பிளாஸ்டிக் பை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். பின்னர் ஊராட்சி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி எடுத்து கொண்டனர். நிகழ்ச்சியில் ஊராட்சி செயலர் ஜெய்சங்கர் மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story