மன்னாத சுவாமி கோவில் தீமிதி திருவிழா

மன்னாத சுவாமி கோவில் தீமிதி திருவிழா நடந்தது.
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள காளிங்கராயநல்லூர் கிராமத்தில் பச்சையம்மன் சமேத மன்னாத சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆவணி மாதம் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் தீமிதி திருவிழா கடந்த மாதம் 25-ந் தேதி தொடங்கி, நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நேற்று தீ மிதி திருவிழா நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். வேப்பூர் தீயணைப்பு துறையினர் மற்றும் குன்னம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





