இனிப்பு-கார வகைகள் தயாரிப்பாளர்கள் உணவு பாதுகாப்புத்துறையில் பதிவு செய்ய வேண்டும்


இனிப்பு-கார வகைகள் தயாரிப்பாளர்கள் உணவு பாதுகாப்புத்துறையில் பதிவு செய்ய வேண்டும்
x

தீபாவளி பண்டிகையையொட்டி இனிப்பு-கார வகைகள் தயாரிப்பாளர்கள் உணவு பாதுகாப்புத்துறையில் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

அரியலூர்

தீபாவளி பண்டிகை வருகிற 24-ந்தேதி கொண்டாடப்படவுள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி இனிப்பு மற்றும் கார வகைகளுக்கு சீட்டு நடத்துபவர்கள் உள்பட அனைத்து தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்களும் உணவு பாதுகாப்புத்துறையில் பதிவு செய்து உரிமம் பெற்று பொதுமக்களுக்கு விற்பனை செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இனிப்பு, கார வகைகள் மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பவர்கள் தரமான மூலப்பொருட்களை கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து பாதுகாப்பான இனிப்பு, பலகார பொருட்களை மக்களுக்கு வழங்க வேண்டும். பண்டிகை காலத்தில் மட்டும் இனிப்பு பலகாரம் உட்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உடனடியாக http://foscos.fssai.gov.inஎன்ற இணையதளத்தில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம், 2006-ன் கீழ் தங்களது வணிகத்தினை பதிவு பெற்று கொள்ள வேண்டும். நுகர்வோராகிய பொதுமக்கள் உணவு பொருட்களை வாங்கும் போது அவற்றில் தயாரிப்பு தேதி, தயாரிப்பாளர் விவரம் மற்றும் உணவு பாதுகாப்பு உரிமம் எண் போன்றவற்றை சரிபார்த்து வாங்க வேண்டும். மேலும் உணவு பொருட்களின் தரம் தொடர்பான புகார்களுக்கு உணவு பாதுகாப்பு துறையை 9444042322 என்ற வாட்ஸ்-அப் எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Next Story