ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் மாவோயிஸ்டுகள் ஆஜர்


ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் மாவோயிஸ்டுகள் ஆஜர்
x

ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் மாவோயிஸ்டுகள் ஆஜர் படுத்தப்பட்டனர்.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கடந்த 2017-ம் ஆண்டு போலி சிம் கார்டுகள் பெற்று பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட மாவோயிஸ்டுகள் சைனா என்ற சைனி (வயது 36), மேத்யூ ஜார்ஜ் (42) ஆகிய 2 பேரும் ைகது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் விசாரணைக்காக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கூடுதல் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி காஜிரா ஆர் ஜி ஜி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை வருகிற 20-ந் தேதியன்று விசாரணைக்கு மீண்டும் ஆஜர்படுத்தும் படி நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.


Related Tags :
Next Story