கல்லூரி மாணவர்களுக்கான மாரத்தான் போட்டி


கல்லூரி மாணவர்களுக்கான மாரத்தான் போட்டி
x
தினத்தந்தி 24 Aug 2023 6:45 PM GMT (Updated: 24 Aug 2023 6:45 PM GMT)

கல்லூரி மாணவர்களுக்கான மாரத்தான் போட்டி 31-ந் தேதி நடக்கிறது.

ராமநாதபுரம்

மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் இளைஞர்தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வினாடி வினா, நாடகம், ரீல்மேக்கிங் நடத்தப்பட்டன. தொடர்ந்து மாரத்தான் போட்டி 31-ந் தேதி நடைபெற உள்ளது. இதில் அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் திருநங்கைகள் என மொத்தம் 100 பேர் இந்த மாரத்தான் போட்டியில் கலந்து கொள்ளலாம். போட்டி காலை 7 மணிக்கு ராமேசுவரம் கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பு முதல் பேராவூர் வரை 5 கிலோ மீட்டர் தூரம் நடைபெற உள்ளது. போட்டியை கலெக்டர் தொடங்கி வைக்கிறார். வெற்றிபெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.10 ஆயிரம், 2-வது பரிசு ரூ.7 ஆயிரம், 3-வது பரிசு ரூ.5 ஆயிரம் மற்றும் 7 மாணவர்களுக்கு தலா ரூ. ஆயிரமும் வழங்கப்படும். போட்டிகளில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். போட்டிகளில் மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொள்ளலாம். இந்த தகவலை கலெக்டர் விஷ்ணுசந்திரன் தெரிவித்தார்.


Next Story