ரெயில்வே பாதுகாப்பு படை சார்பில் மாரத்தான் ஓட்டம்


ரெயில்வே பாதுகாப்பு படை சார்பில் மாரத்தான் ஓட்டம்
x

ஜோலார்பேட்டையில் ரெயில்வே பாதுகாப்பு படை சார்பில் மாரத்தான் ஓட்டம் நடந்தது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள ரெயில்வே பாதுகாப்பு படை சார்பில் நேற்று தேசிய ஒற்றுமையை வலியுறுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் ஓட்டம் நடத்தினர். ரெயில்நிலையத்தில் இருந்து தொடங்கிய மாரத்தான் நிகழ்ச்சிக்கு ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

ஜோலார்பேட்டை சிறு விளையாட்டு அரங்க விளையாட்டு வீரர்கள் 40 பேர் பங்கேற்று ஜங்ஷன், வக்கணம்பட்டி, சந்தைக்கோடியூர், இடையம்பட்டி வழியாக சென்று மீண்டும் ரெயில் நிலையம் வந்தடைந்தனர். இதில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் விளையாட்டு வீரர்கள் என பலர் கலந்துகொண்டனர்.


Next Story