புடலங்காய் வரத்து குறைவால் விலை உயர்வுதர்மபுரி உழவர் சந்தையில் ரூ.14-க்கு விற்பனை

தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் புடலங்காய் விளைச்சல் அதிகரித்து உள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக புடலங்காய் விலை கணிசமாக குறைந்தது. நேற்று முன்தினம் தர்மபுரி உழவர் சந்தையில் ஒரு கிலோ ரூ.6-க்கு விற்பனையானது. இந்த நிலையில் சந்தைக்கு புடலங்காய் வரத்து குறைந்ததால் நேற்று ஒரே நாளில் கிலோவிற்கு ரூ.8 விலை அதிகரித்தது.
தர்மபுரி உழவர் சந்தையில் நேற்று ஒரு கிலோ புடலங்காய் ரூ.14-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெளி மார்க்கெட்டுகளில் ஒரு கிலோ ரூ.20 வரை விற்பனை ஆனது. புடலங்காய் விலை உயர்ந்ததால் அதை சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





