புதிய வாரச்சந்தை திறப்பு


புதிய வாரச்சந்தை திறப்பு
x

புதிய வாரச்சந்தை திறக்கப்பட்டது.

சிவகங்கை


Heading

Content Area

மானாமதுரை

மானாமதுரை கண்ணார்தெரு செல்லும் ரோட்டில் பல ஆண்டுகளாக செயல்பட்டிருந்த வாரசந்தை 2020-ம் ஆண்டு இடிக்கப்பட்டு புதிதாக கட்டிடம் கட்டும் பணிகள் நடந்து வந்தது. இதில் 250-க்கும் மேற்பட்ட கடைகள் கட்டப்பட்டு வந்த நிலையில் நேற்று வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி வாரச்சந்தையை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.

இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். சில ஆண்டுகளாக புதிதாக வாரச்சந்தை கட்டப்பட்டு வந்த நிலையில் வியாபாரிகள் ஆனந்தவல்லி அம்மன் கோவில் அருகே மற்றும் ரோட்டோரங்களில் வெயிலிலும் மழையிலும் வியாபாரம் செய்து வந்தனர். இந்த நிலையில் கட்டிடப் பணிகள் சில வாரங்களுக்கு முன்பு நிறைவு பெற்றது. விரைவில் வாரச்சந்தையை ஏலம் விடுவதற்கான வேலைகளும் நடந்து வருகிறது. இதன் இடையே வியாபாரிகள் நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி மற்றும் துணைத் தலைவர் பாலசுந்தரம், ஆணையாளர் சக்திவேல், நகராட்சி கவுன்சிலர்கள் ஆகியோரிடம் புதிய வார சந்தையை திறப்பதற்கு கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று நகராட்சி தலைவர் புதிய வார வாரச்சந்தையை பயன்பாட்டிற்கு கொண்டு வந்ததை தொடர்ந்து ஆங்காங்கே கடை அமைத்திருந்த வியாபாரிகள் அனைவரும் புதிய சந்தைக்கு வந்து வியாபாரம் செய்தனர். இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். பொதுமக்களும் எந்த சிரமமும் இன்றி பொருட்களை ஒரே இடத்தில் வாங்கி சென்றனர். மேலும் நகராட்சி தலைவர், துணைத்தலைவர், ஆணையாளர் மற்றும் நகராட்சி கவுன்சிலர்களுக்கு வியாபாரிகள் நன்றி தெரிவித்தனர்.


Next Story