கர்ப்பிணி மர்மசாவு


கர்ப்பிணி மர்மசாவு
x

செஞ்சி அருகே கர்ப்பிணி மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம்

செஞ்சி,

செஞ்சி அருகே தச்சம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கண்ணாயிரம். இவரது மகள் பூங்கோதை (வயது 25). இவருக்கும் பொன்பத்தி கிராமத்தை சேர்ந்த ராம்குமார் என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. 3 மாத கர்ப்பமாக இருந்த பூங்கோதைக்கு உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று பொன்பத்தியில் உள்ள தனது வீட்டுக்கு சென்றார். இந்த நிலையில் ராம்குமார் குடித்துவிட்டு வந்து பூங்கோதையை திட்டியதாக தெரிகிறது. இது குறித்து பூங்கோதை தனது பெற்றோரிடம் சொல்லி தன்னை ஊருக்கு அழைத்து செல்லுமாறு கூறியுள்ளார். இதையடுத்து பூங்கோதையின் பெற்றோர் பொன்பத்திக்கு வந்து தனது மகளை தங்களுடன் அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளனர். அதற்கு ராம்குமார் மற்றும் அவரது தந்தை, தாய் ஆகியோர் மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதையடுத்து பூங்கோதையின் பெற்றோர் திரும்பி சென்றனர். இந்த நிலையில் வீட்டில் இருந்த பூங்கோதை மர்மமான முறையில் இறந்தார். இது குறித்து கண்ணாயிரம் செஞ்சி போலீசில் புகார் அளித்தார். அதில் எனது மகள் பூங்கோதை சாவில் சந்தேகம் உள்ளது. எனவே இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் அவர் கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பூங்கோதை உடல் நிலை பாதிப்பால் இறந்தாரா, அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story