பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலைப்பயிற்சி


பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலைப்பயிற்சி
x

பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலைப்பயிற்சி நடந்தது.

கரூர்

தோகைமலை அருகே நல்லாக்கவுண்டம்பட்டியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி மாணவிகளுக்கு 3 மாத தற்காப்பு கலைப்பயிற்சி தொடக்க விழா நடந்தது. இதற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் பிரேமாராணி தலைமை வகித்தார். பயிற்சி முகாமை தோகைமலை வட்டார கல்வி அலுவலர் மாகாளி தொடங்கி வைத்து, பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இதில், ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவிகளுக்கான பயிற்சியினை கராத்தே பயிற்சியாளர் ஆஸ்தியன் அளித்து வருகிறார்.


Next Story