தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம்


தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம்
x

தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

விருதுநகர்

சிவகாசி,

தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி சிவகாசி மாநகர தி.மு.க. சார்பில் திருத்தங்கல் 24-வது வார்டு பகுதியில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த இமானுவேல் சேகரன் உருவப்படத்துக்கு தி.மு.க. மாநகர செயலாளர் உதயசூரியன், மேயர் சங்கீதா இன்பம், பகுதி செயலாளர் காளிராஜன், மாநகர பிரதிநிதி ராஜேஷ், செந்தில்குமார், மாநகராட்சி கவுன்சிலர் திருப்பதி, ஒன்றிய கவுன்சிலர் கலைமணி உள்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மாநகராட்சி கவுன்சிலர் ஞானரஞ்சித் ராஜா செய்திருந்தார். இதேபோல் அ.தி.மு.க.சார்பில் பெரியபொட்டல்பட்டியில் உள்ள இமானுவேல்சேகரன் உருவச்சிலைக்கு ஒன்றிய செயலாளர் லயன் லட்சுமிநாராயணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் ஒன்றிய கவுன்சிலர் ஜெகத்சிங்பிரபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story