தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம்


தியாகி இமானுவேல் சேகரன் நினைவுதினத்தையொட்டி அவரது உருவப்படத்திற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு, தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. மரியாதை செலுத்தினர்.

விருதுநகர்

காரியாபட்டி,

தியாகி இமானுவேல் சேகரன் நினைவுதினத்தையொட்டி அவரது உருவப்படத்திற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு, தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. மரியாதை செலுத்தினர்.

காரியாபட்டி

காரியாபட்டி பஸ் நிலையம் முன்பு தியாகி இமானுவேல் சேகரன் நினைவுதினத்தையொட்டி அவரது உருவப்படத்திற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்தநிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் செந்தில், ஒன்றிய செயலாளர்கள் செல்லம், கண்ணன், நரிக்குடி கண்ணன், மாவட்ட கவுன்சிலர் தங்க தமிழ்வாணன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சிவசக்தி, சந்திரன், முன்னாள் யூனியன் தலைவர் ஜெயராஜா, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி தலைவர் தங்கப்பாண்டியன், மாவட்ட பிரதிநிதி சங்கரபாண்டியன், மாவட்ட துணைத்தலைவர் கல்யாணி, கம்பிக்குடி முருகன், வக்கீல் குட்டி ஜெகன், ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ராஜபாளையம்

தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை யொட்டி ராஜபாளையம் அருகே இளந்திரை கொண்டான் ஊராட்சியில் அமைந்துள்ள அவரது திருஉருவ சிலைக்கு தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

எம்.பி. அலுவலகம்

தியாகி இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தையொட்டி விருதுநகரில் மாணிக்கம் தாகூர் எம்.பி. அலுவலகத்தில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு தலைவர் ராஜ்குமார் தலைமையில் இமானுவேல் சேகரன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்தநிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணனசாமி, மாவட்ட நிர்வாகிகள் மீனாட்சி சுந்தரம், சிவகுருநாதன், நகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story