மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 July 2023 6:45 PM GMT (Updated: 29 July 2023 6:45 PM GMT)

சீர்காழியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை

சீர்காழி:

மணிப்பூர் மாநிலத்தில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததை கண்டித்து சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சி நிர்வாகி மாரியப்பன் தலைமை தாங்கினார். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஸ்டாலின், விவசாய சங்க மாவட்ட செயலாளர் துரைராஜ், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் இளங்கோவன், விவசாய சங்க மாவட்ட பொருளாளர் செல்லப்பன் ஆகியோர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


Next Story