மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

சேரன்மாதேவியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

சேரன்மாதேவி பஸ் நிலையம் அருகே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றியக்குழு உறுப்பினர் கோமதிநாயகம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஸ்ரீராம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மோகன் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில், சேரன்மாதேவி பேரூராட்சியில் வசிக்கும் தென்பகுதி மக்களுக்கு தினமும் சீராக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும், பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும். பேரூராட்சி பகுதியில் உள்ள முறைகேடான குடிநீர் இணைப்புகளை துண்டிக்க வேண்டும், சேரன்மாதேவி பஸ் நிலையத்துக்குள் பி.பி. பஸ்கள் வந்து செல்ல வேண்டும். சேரன்மாதேவி பழைய பஸ் நிலையத்தில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் ஒன்றிய செயலாளர் அருள் பாலசுப்ரமணியன், மாவட்டக்குழு கீதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story