மாரியம்மன் கோவிலில் மாசி திருவிழா


மாரியம்மன் கோவிலில் மாசி திருவிழா
x

மாரியம்மன் கோவிலில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விருதுநகர்

திருச்சுழி,

திருச்சுழியில் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா 10 நாட்கள் நடைபெறுகிறது. அம்மன் சன்னதிக்கு முன்பு உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக யாகசாலை வேள்வி பூஜைகள் நடைபெற்றன. பின்னர் கொடிமரத்திற்கு முன்பு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழாவினை முன்னிட்டு தினமும் சிறப்பு அலங்காரத்தில் வெள்ளி, ரிஷப, மயில், அன்னம் உள்பட பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வருகிற 3-ந் தேதி மாசிப்பொங்கல் திருவிழா நடைபெறுகிறது. கொடியேற்றும் விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story