போக்சோ சட்டத்தில் கொத்தனார் கைது

போக்சோ சட்டத்தில் கொத்தனார் கைது செய்யப்பட்டார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்தவர் இளவரசன் (வயது 43), கொத்தனார். இவர் 2 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ய முயற்சித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சுமதி ராமு போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து இளவரசனை கைது செய்தார். இவர், 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சிறை தண்டனை முடிந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியில் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





