விஷம் குடித்து கொத்தனார் தற்கொலை


விஷம் குடித்து கொத்தனார் தற்கொலை
x

ஆர்.எஸ்.மங்கலத்தில் விஷம் குடித்து கொத்தனார் தற்கொலை செய்து கொண்டார்.

ராமநாதபுரம்

ஆர்.எஸ்.மங்கலம்,

ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா புல்லமடை ஊராட்சி வல்லமடை கிராமத்தைச் சேர்ந்தவர் பெஞ்சமின் (வயது 65). கொத்தனார். இவர் சவேரியார் நகரில் உள்ள தனது தங்கை ஆரோக்கிய சிறுமலர் வீட்டில் தங்கி இருந்தார். குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பெஞ்சமின் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மகன் ஸ்டீபன் பிரபாகர் (வயது 38) கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

1 More update

Related Tags :
Next Story