கொத்தனார் தற்கொலை


கொத்தனார் தற்கொலை
x
தினத்தந்தி 18 Oct 2023 12:15 AM IST (Updated: 18 Oct 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கொத்தனார் தற்கொலை செய்து கொண்டார்.

சிவகங்கை

திருப்புவனம்,

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள ரெட்டகுளம் பகுதியை சேர்ந்தவர் சரவணன்(வயது 37). கொத்தனாரான இவர் மடப்புரம் விலக்கு அருகே எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் வசித்து வந்தார். இறந்துபோன இவரது தந்தை தனது கனவில் அடிக்கடி வருவதாகவும், தன்னை கூப்பிடுவதாகவும் கூறினாராம். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு திருப்புவனம் வைகை ஆற்று மேம்பாலத்தில் அருகே விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் சரவணன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இந்த தற்கொலை குறித்து திருப்புவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

1 More update

Next Story